மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான்.
இந்த திருமண வாழ்க்கை மூலமாகத்தான் மனிதன் வாழ்க்கையின் கூடுதலான சுகங்களை நோக்கங்களை வாழ்ககையின் யதார்த்தத்தை அடைகிறான். ஆகவே இந்த வாழ்க்கைக்கு நுளைகையில் ஒவ்வொருவரும் சந்தோஷங்களையும் சங்கடங்களையும் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனாலும் இந்த வாழ்க்கையில் ஏற்படுகின்ற சந்தோஷங்களை சங்கடங்களை எவ்வாறு சமப்படுத்தி சமாளித்து கொள்வது என்பதே வாழ்ககையின் உண்மையான போராட்டமாகும். இதை உணராத தம்பதிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறு பாடுகள் மனக் கசப்புகள் எற்படுகிறது. இந்த மகனக் கசப்புகள் வேறு பாடுகள் நாளடைவில் பிரச்சனையாக விரக்தியாக மாறி விவாகரத்தில் கொண்டு சென்று விடுகிறது. எனவே மனித வாழ்க்கையில் பிரச்சனை என்பது தவிர்க்க முடியாதது. எம் வாழ்க்கையில் எற்படுகின்ற கருத்து வேறு பாடுகளை நாம் எவ்வாறு சந்திப்பது என்பதை நோக்குவோம். திரு மண வாழ்ககையில் கணவன் மனைவிகளிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனையை விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு அன்பு பரஸ்பரம் என்பதினூடாகவே தீர்க்கப்பட வேண்டும். கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளும், மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நடைமுறைப் படுத்துகின்ற போது இந்த பிரச்சனைகள் உருவாக இடமில்லை. எனவே இந்தப் பகுதியினூடாக நாம் கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிடுவோம்.

• எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து உனக்கு நான் எனக்கு நீ என்று ஏற்று நேசித்து வாழ்வதே திருமணமாகும்

• நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தங்கள் என் உடல் உனக்கு மட்டும் உரிமையுடையது. அதை மற்றவரின் கண்களுக்கு கட்சிக்கு தடை செய்யப்பட்டது என்கிறது. மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் தம்பதி வாழ்க்கையில் ரகசியமற்றவர்கள். மேலும் அதை பிறரிடம் சொல்லி ரசிப்பதில் (ரகசியம் ) தடுக்கப்பட்டதாக குறிக்கிறது.

• நபிகளார் அன்னை ஹதீஜா நாயகி வாழ்க்கை போல் வயது வித்தியாஷம் தகுதி பார்க்காது அன்பு பரஸ்பரம் விட்டுக் கொடுப்புகளுடன் வாழ்வது.

• ஹஸரத் பாத்திமா அலி அவர்களின் இல்லற வாழ்க்கை வரலாற்றை படித்து அதனைப்போல் தாரள மனத் தன்மையோடு வாழுங்கள்

• கணவன் என்ற ரீதியில் நீங்கள் மனைவிக்கு செய்கின்ற பணிவிடைகளை உதவிகளை தேவைகளை ஒரு போதும் கேவலமாக அர்த்தமற்றதாக நினைக்காதீர்கள்.

• உலகம் எவ்வளவு பெரிது இருந்தும் தன்னை நம்பி முந்தானை விரித்து தன்னை அர்ப்பணிப்பவளே மனைவி. அவளை கண் களங்காது பாதுகாப்பவனே கணவன்.வயது வந்த பின்னர் தன்னை பெற்றெடுத்தவரிடமே வெட்கித்து பாதுகாத்த தனது எல்லாவற்றையும் அர்ப்பணித்து வாழ்பவளே மனைவி.

• அழகியவரவேற்பு வேலையிலிருந்தோ வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

• மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம்.

• வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.

• வெளியில் சந்தித்த தோல்வியை மன சங்கடங்களை மனைவியில் சினந்து கொள்ளாதீர்கள்

• இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்

• நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.

• தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

• மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

• ஊங்கள் மனைவியை மனப் பூர்வமாக நம்புகள்.

• நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

• மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

• நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

• நீங்களிருவரும் ஆனந்தமாகக் கழித்த அனுபவங்களை இருவரும் தனித்து இருக்கும்பொழுது மீட்டிப் பாருங்களேன்.

• விளையாட்டும் கவன ஈர்ப்பும்

• நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

• ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ குர்ஆன் நபிமொழி பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

• இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு வெளியில்அழைத்துச்செல்லுங்கள்.

• இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு" விஷயங்களில் (சினிமா ஸீரியல்கள் போன்றவற்றில்) உள்ள தீங்குகளை எடுத்துச் சொல்லி அவற்றை மறக்கடியுங்கள்.
• வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயுற்றோ களைப்படைந்தோ இருந்தால்.
• கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.
• இனியவளின் ஆலோசனை

• குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடிஆலோசனை செய்யுங்கள்.

• அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் சிறப்புத் தருணங்களில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)

• மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

• மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

• பிறரைக் காணச் செல்லும்பொழுது

• மார்க்கத்தில்ஃபழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினால் கண்டியுங்கள்).

• அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

• அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

• உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது

• மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

• நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவளுக்குத் தேவையான அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.

• மனைவிக்கு தேவையான செலவுகளை கொடுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் நோய் ஏற்படலாம் பிள்ளைகளுக்கு தேவை ஏற்படலாம்

• குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துச் செல்லுங்கள்.

• நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன்இ கடிதம்இ ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுஇ உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

• முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்

• திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

• எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).
• பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.

• பொருளாதார உதவி

• கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும்; மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)

• அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள்வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

• அவசியத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.

• தான் தனக்கு தேவையானதை செய்து விட்டு அவளுக்கு தேவையானதை கண்டும் காணதது போல் இருக்காதீர்கள்.

• மனைவியை வெளிநாடு அனுப்பி சம்பாதித்து தான் வீட்டிலிருந்து உண்ணாதீர்கள்.

• உங்கள் வீட்டுக்கு அதிக தேவை இருக்க மேலும் உங்களது குடும்ப உறவினர்களை கவனிக்காதீர்கள். அதற்காக பெற்றோரை கவனிக்க வேண்டாம் என்பதல்ல. உங்கள் பெற்றோருக்கும் உங்கள் மனைவி மூலமாக உதவி செய்யுங்கள். அவர்களுக்குள் புரிந்துணர்வு பாசம் ஏற்படும்.

• உங்கள் குடும்பத்தில் அவசிய அதிக தேவை இருந்தால் அதை தன் மனைவியிடம் ஆலோசித்து செய்யப்பழகுங்கள். பெண் என்பவள் எப்போதும் ஆலோசனை கேட்பதை விரும்பக் கூடியவள்.

• தன்னிடம் சொல்லாது தன் கணவர் தேவையற்ற விடயத்தில் வீண் செலவழிப்பதை மனைவி விரும்ப மாட்டாள். அவளிடம் உண்மையான காரணங்களை எடுத்துச் சொன்னால் நிச்சயமாக பெண் தடுக்கமாட்டாள்.

• நூட்டின் பொருள் விலை வாசியை கவனித்து வீட்டுச் செலவுக்கு பணம் கொடுங்கள். 10 வருடத்திற்கு முன் 100 ரூபாய் இருந்தால் ஒரு சாதரண கணவன் மனைவி சாப்பிட்டு விடலாம்.இன்று அது முடியுமா?

• ஊங்கள் பிள்ளைகள் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் செலவுகளில் வருமானங்களில் கவனமாக இருங்கள். புpள்ளைகளை பெற்றெடுத்தால் மட்டும் போதாது அவர்களுக்கான கல்வி எதிர்காலம் என்பதை வழிகாட்டி கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே உரியது.

• சிறு சிறு விடயத்திற்காக எல்லாம் சண்டை பிடிக்காதீர்கள். ஊண்மையான கோபத்திற்கு அர்த்தமற்று போய் விடும்.

• ஊங்களது பிள்ளைகளுக்கு முன் நீங்கள் வாக்குவாதப்பட்டு அவர்களின் சிந்தனைகளை திசை திருப்பாதீர்கள்.

• புpள்ளைகளுடன் நண்பராக பழக முயற்சியுங்கள். கூடுதலான வீடுகளில் தந்தையோடு பிள்ளைகளின் தொடர்பு குறைவாக இரக்கிறது. ஆதனால் பிள்ளைகள் அனைத்து தேவைகளையும் தாயிடமே சொல்லுகிறார்கள்.

• அழகும் நறுமணமும்

• நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

• எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

• அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

• மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்பதை நினைவில் வையுங்கள் (இருவரில் ஒருவரின் உடல்நலக்குறைவு காரணமாகத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்).

• பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

• இறைவன் படைத்திருக்கும் இன உறுப்பைத் தவிர்த்து வேறு வகைகளில் இல்லறச் சுகம் அனுபவிக்கக் கூடாது (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

• காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.
• அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

•அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

• மாதவிடாய்க் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).

• பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.

• மனைவிக்கு விருப்பமற்ற கஷ்டமான கோணங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

• அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்

• இரகசியங்களைப் பாதுகாத்தல்

• படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதீர்கள்.

• இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது

• தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.

• உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

• காலை-மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ரு (இறைநினைவுகளை) அவளுக்கு போதியுங்கள்.

• இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

• ஹஜ்ஃஉம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

• மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.

• அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

• உங்களின் வீட்டுக்குவர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

• அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

• பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

• உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) உதவி செய்ததுபோல் செய்து அன்பு பாராட்டுங்கள்.
• இஸ்லாமியப் பயிற்சி

• கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :

• இஸ்லாத்தின் அடிப்படை

• அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்

• படித்தல் மற்றும் எழுதுதல்
• இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது

• பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்

• வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.

• மேன்மையான அக்கறை

• வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.

• மஹரம் அல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).

• அதிகப்படியாகத் துருவி ஆராய்தலைத் தவிர்ந்து கொள்வது

• உதாரணமாக அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக்கூட பிழையாகப் பேசியிருக்கலாம்.


• உங்கள் மனைவியை நீங்கள் சந்தேகப் படாதீர்கள். சந்தேகம் ஏற்படுமாறு நடந்தால் அவளிடம் உண்மை சொல்லி விசாரியுங்கள். நீர் ஏன் இவ்வாறு நடந்தது இந்தக் காரிய்தால் எனக்கு இவ்வாறு எண்ணம் ஏற்படுகிறது. நமக்குள் பிரிவு ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறேன் என்று தெளிவாக பேசுங்கள்.

• அதற்கு பிறகும் தொடர்ந்தால் நீங்கள அவளின் பேற்றோரை உறவினரi அழைத்து விடயத்தை சொல்லுங்கள்..

• அவசர விஷயத்திற்காக அண்மையில் உள்ள இடங்களுக்குப் போவதைத் தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

• தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதைக் கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

• பொறுமையும் சாந்தமும்

• மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் சிறிய விஷயங்களைப் பெரிதாக்குவதும் போன்றவைதாம் திருமண பந்தத்தை முறித்துவிடும் அளவுக்குச் சென்று விடுகிறது.

• இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையைத் தாமதப்படுத்துதல் புறம் பேசுதல் தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை இது போன்றவை.

• உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

• முன்னித்த தவறுகளை மீண்டும் மீண்டும் குத்தி பேசாதீர்கள்.

• தவறுகளைத் திருத்துதல்

• முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

• அதிலும் திருந்தாவிட்டால் தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காகஇ படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.

• அதிலும் திருந்தாவிட்டால் கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).

• மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் ஒவ்வொரு கணவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

• மனைவி (எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல் தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல் கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது எங்கே சென்றிருந்தாள் என்பதைக் கணவனுக்குச் சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.

• குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டதுபோல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.

• காயம் உண்டாகும்படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.


• செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஒருக்காலும் ஈடுபடக் கூடாது.

• மன்னிப்பும் கண்டிப்பும்

• பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

• உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

• தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).

• எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு களைப்புஇ மாதவிடாய் போன்றவற்றின் மன-உடல் உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு).

• கற்பிணியாக இருக்கும காலத்தில் மிக நதானமாக நடந்து கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் அடிப்பதை விருப்தீர்கள்.

• பிறர் மீதுள்ள கோபத்தை தன் மனைவிமேல் காட்டாதீர்கள்.

• சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியைக் கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியைக் கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள் பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள்; தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.

• தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்குமுன் வேறுவழியில் நயமாகச் சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

• அவமரியாதை செய்யக்கூடிய வகையில் மனைவியைத் திட்டுவதைத் தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

• பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால் தனிமை கிடைக்கும்வரை பொருத்திருங்கள்.

• மனைவிமீது கோபம் ஏற்பட்டால் உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும்வரை சற்றுப் பொறுமை கொள்ளுங்கள்.

எனவே கணவன் மனைவிகளிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை நாம் அறிந்து கொண்டோம். அதன் படி வாழ்வோம். நாம் நினைத்தவாறு வாழலாம் பெண் என்பவள் தனக்கு அடிமை என்ற தவறான எண்ணங்களை விட்டு விட்டு அவளது உரிமையை அவளுக்கு அளித்தால் நிச்சயமாக கணவனுக்கு கட்டுப் பட்ட மனைவியாக இருப்பாள். எடுத்ததெற்கெல்லாம் அடிப்பதும் வீட்டை விட்டு வெளியேறுவதும் ஆண் என்ற பெயரை சமூகத்தில் சீரழித்து விடும். பெண் என்பவள் கண்ணீர் சிந்தாது காப்பாற்றுபவனே ஆண். அந்த பாதையில் நாம் வாழ்ந்து எமது எதிர்கால சமூதாயத்தை சிறப்பாக எழுப்புவோம். எமது சண்டைகள் பிரச்சனைகள் எமது பிள்ளைகளின் எதிர் கால வாழ்கையை கேள்விக் கறியாக்கி விடும். தன் மனைவி என்று அவளின் கருத்துக்கும் மதிப்பளிப்பது கணவனின் கடமை. பெண்ணுக்கு அடிமைப்படுவதா என்று தவறாக எண்ணாமல் தனக்கு அடிமைப்பட்டவளின் அணுசரனையில் வாழ்கிறேன் என்று சிந்திப்போம். அழகி கருத்தை யார் சொன்னாலும் அதற்குத்தான் மதிப்பளிக்க வேண்டுமே தவிர பால் இனத்திற்கல்ல



கருத்துகள் இல்லை: