முகவுரை:

ஏக இறைவன் எல்லாம்வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல்லுக்கே எல்லாப்புகழும் அவன் மனித கற்பனைக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டவன். இந்த உலகத்திற்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் அவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணற்றவை, எந்தவொரு கணிப்பீட்டு நிபுணராலும் கணிப்பீடு செய்ய முடியாதவை. இப்பணியில் உலகமே ஒன்று திரண்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்பேற்பட்ட சக்தியும் வல்லமையும் ஆற்றலும் நிறைந்த அந்த அல்லாஹ்வைப் போற்றுகின்றேன்;,; துதிக்கின்றேன்;,; வணங்குவதற்கு தகுதியானவன் அவனன்றி வேறில்லையென சான்று பகர்கின்றேன்.

1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்

1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்

உலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும்.

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்

அநியாயம் செய்யும் ஓர் அசத்திய சக்தியை, அல்குர்ஆன் கண்டிக்கும் ஒரு சக்தியை இஸ்லாத்தை தனது கொள்கையாக வைத்திருப்பதாய் சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டால் ஆதரிக்க முடியுமா?

இஸ்லாத்தை அழிக்கும் முஸ்லிம்களை அழிக்கும் இரத்தம் தோய்ந்த அந்தக் கைகளை நேசக்கரத்தோடு பற்ற முடியுமா?

என் வலிகளை போலிகளாக

என் வலிகளை போலிகளாக நினைத்தாலும் இறை மொழிகளையும் நபி வழிகளையும் சிந்திப்பீர்கள் என்ற எதிர் பார்ப்போடு…

கடிதமுமல்ல
கட்டுரையுமல்ல
கவிதையுமல்ல

உடம்பில் உவர் நீரில்லை
உருகிய கண்ணீராகி
உங்களோடு எழுகிறது…

கர்பலா நிகழ்வும் அது கற்றுத்தரும் பாடங்களும்

இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. பெருமானார் முத்தமிட்ட அதரங்களில் கொடியோர்கள் பிரம்பால் அடித்த அகோர நிகழ்வு அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹ{சைன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா சன்டாளர்களால் இம்சிக்கப்பட்டு கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.